ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கைவிடப்பட்ட கிடங்கில் ரசாயனம் இருந்த கேன் வெடித்ததில் வடமாநில இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். ராசாயனம் இருந்த கேனை கத்தியால் அறுத்த போது திடீரென வெடித்ததில் சந்திரிகா பஸ்வான் என்பவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சஞ்சய் என்பவர் சென்னை ராஜுவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடித்து சிதறிய ரசாயனம் குறித்து சோமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.